விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்தி பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன், சிவபார்வதியின் மைந்தன், கணபதி, ஆனைமுகன் என இன்னும் பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தி திருநாளில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, குரோதி வருடமான 2024 -ல் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டடப்படுகிறது. இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. விநாயகர், புதிய தொடக்கங்களின் கடவுள், முழுமுதற்கடவுள், தடைகளை நீக்குபவர், ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுள் என போற்றப்படுகிறார். பெரியபிள்ளை வலசையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் உருவ சிலை விநாயகர் சதுர்த்தி வரலாறு... விநாயக சதுர்த்தி எப்போது முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்பது அறியப்படவில்லை என்றாலும் மன்னன் சிவாஜியின் காலத்திலிருந்தே இந்த விழா புனேவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது . இந்தியாவில், விநாயக சதுர்த்தி முதன்மையாக மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா , மத்தியப் பிரதேசம் , குஜராத் , ராஜஸ்தான் மற்...